Also Watch
Read this
By: Manigandan Raja

காவிரி குடிநீர் வீணாகியது :
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே பிரம்மாண்ட காவிரி குடிநீர் குழாய் உள்ளது. வெளி மாவட்டதிற்கு செல்லும் இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி உயரத்திற்கு காவிரி நீர் பீறிட்டு வெளியேறியது.
மேலும் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் ஆறு போல் பெருக்கெடுத்து அருகில் உள்ள கால்வாய் மற்றும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மின் மோட்டார் நிறுத்தப்பட்டதை அடுத்து நீரின் வேகம் படிப்படியாக குறைந்து நின்றது.
இருப்பினும் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணானது. இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடைப்பிற்கான காரணம் குறித்து
கேட்டறிந்ததுடன் அதை விரைந்து சரி செய்யவும் அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved