Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத்திருவிழா கடந்த -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
ஒன்பதாம் நாள் திருவிழாவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரவுள்ள நிலையில், அதற்கான பிரம்மாண்ட தேரை மலர்கள், தோரணங்கள் மற்றும் வண்ணத் துணிகளால் அலங்கரிக்கும் பணிகளில் கோயில் ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved