news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடித்திருவிழாவின் 5ம் நாளையொட்டி வீதி உலா
tv

Also Watch

ஆடித்திருவிழாவின் 5ம் நாளையொட்டி வீதி உலா

பர்வதவத்தினி அம்பாள்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பர்வதவத்தினி அம்பாள்

இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்,மாசி சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 5ம் தேதி அம்மன்சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கன்னி லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று 5ம் நாளான ஸ்ரீ பர்வதவத்தினி அம்பாளுக்கு நாயக்கர் மண்டபத்தில் சிறப்பு தீபாரதனை நடைபெற்ற பின்பு வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் யானை ராமலட்சுமி, அம்பாள் வீதி உலா வரும் போது ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி அனைவரையும் மெய் சிலுக்க வைத்தது.


17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வரும் 16ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி ஆடி அமாவாசையும் ,13ம் தேதி திருத்தேராட்டமும் நடைபெறும், அதே போல ஆடித்திருவிழாவில் 10நாட்கள் காலை மாலை என அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

Related Link
அடுத்தடுத்து பின்னால் வந்த 5 கார்கள் மோதி விபத்து

அடுத்தடுத்து பின்னால் வந்த 5 கார்கள் மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved