சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி பரமன்குறிச்சி, தளவாய்புரம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை மழை பெய்து வருகிறது. முன்பாக அதிகாலை 2.30 மணி முதல் மூன்று மணி வரை மேல் சுமார் 30 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மழை பெய்தது வியாபாரிகள் விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Related Link கதவை தட்டி தட்டியே உடைத்த ராட்சத உருவம்