Also Watch
Read this
By: Fyrose Banu

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் குப்பத்தில் வசிப்பவர் ராகேஷ் 28 இவர் கடந்த 14 ஆம் தேதி துலுக்காத்தம்மன்கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு காலகாலமாக தீச்சட்டி தூக்கி வரும் 65 வயது முதியவருக்கு பதிலாக வேறு யாராவது இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குதல் என்று கேட்டதற்கு முதியவரின் பிள்ளைகளான புகழ் மற்றும் எழில் மற்றும் பிரபு ஆகிய மூன்று பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் நீங்கள் ஊருக்கு வரக்கூடாது உங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று கூறியதாகவும், ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் இதை தட்டிக்கேட்ட ராகேஷ் செல்வகுமார் தனுஷ் மீது புகழ் மனைவி பொய் புகார் கொடுத்துள்ளார்,

ஊர் முன்பு தப்பாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார் இதனால் ராகேஷ் கைது செய்யப்பட்டு ஊர் மக்கள் சொல்லி அவர்களை விடுவித்ததாகவும், தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் பங்காளிகளாக இருக்கும் நிலையில் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்து மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் ஊருக்கு வெளியில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் மீன் தொழிலை தொழிலாக செய்து வரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி உள்ளனர்

இந்த நிலையில் தான் கோவில் நிகழ்ச்சியில் திருவிழாவுக்கு சாமி கும்பிடச் சென்ற நானும் என் அம்மாவும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளதால் இதனால் காயமடைந்த என்னுடைய அம்மா அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரு தினத்துக்கு முன்பு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதை அடுத்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகழ் எழிலரசன் இளவரசன் ஆகியோர் மீது கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார் அளிக்கப்பட்டது,
புகாரைப் பெற்றுக் கொண்ட திருவொற்றியூர் போலீசார் எஃப் ஐ ஆர் போடாமல் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். புகார் கொடுக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் அதற்கான புகார் காப்பியை கேட்டால் நீங்கள் கொடுத்த புகார் காணவில்லை என காவல்துறையினர் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஆளுங்கட்சியை ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், இவர்கள் மூவரும் தாவெக கட்சியில் இருப்பதால் இவர்கள் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் புகாரை எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுங்கட்சி இருப்பதால் அவர்கள் மீது ஒன்றும் செய்ய முடியாது என்று காவல்துறையே எங்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர்.

தவெக சட்டமன்ற உறுப்பினர் தான் அவர்களை கைது செய்ய சொன்னதாகவும் எனக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகின்றது ஏற்கனவே என் கணவர் கைது செய்து விடுவித்தனர். மீண்டும் அவர்களை கைது செய்ய போலீசார் ஈடுபடுவதாகவும் அவர்கள் கையில் கிடைத்தால் கொலை செய்து விடுவோம் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் ஆனால் விஜய் கட்டப்பஞ்சாயத்து பண்ணக்கூடாது என்று சொல்லி இருக்காரு ஆனால் இவங்க எல்லாம் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர் சார்பாக மாதம் மூன்று லட்ச ரூபாய் வருமானம் அதை ஊர் பொதுமக்கள் கேள்வி கேட்பதால் ஆளும் கட்சி எம் எல் ஏ ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு அதை தட்டி கெட்ட எங்கள் மீது ஆட்சி அதிகாரத்தை வைத்து பொய் புகாரை கொடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுத்த புகாரை காணவில்லை என ஆளுங்கட்சியின் ஆதரவாக காவல்துறையின் செயல்பட்டு வருவதாகவும் இதனால் நாள் முழுக்க காவல் நிலையம் முன்பு காத்துக் கிடப்பதாக வேதனையுடன் பெண்கள் பூரி கூறியதால் இதனால் காவல் நிலையம் முன்பு கூடிய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவால் புகார் மனுவை காணவில்லை என தட்டிக் கழித்த காவல்துறையால் மனம் உடைந்து காவல் நிலையம் முன்பே பெண்கள் காத்துக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved