Also Watch
Read this
By: Manigandan Raja

கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு :
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் சாலையில் R.V. பீட்ஸ் என்ற கோழி பண்ணை இயங்கி வருகிறது.இந்தக் கோழி பண்ணையில் கடந்த 10 நாட்களாக தினம் தினம்
ஆயிர கணக்கான கோழிகள் வைரஸ் தாக்கப்பட்டு.
கொத்து கொத்தாக இறந்த கோழிகளை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்படும் வீடியோ நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியின் எதிரொலியாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று புதைக்கப்பட்ட கோழிகளை ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து அருகிலுள்ள விவசாய தோட்டங்களில் இறந்து கிடந்த கொக்கு,நாரை,மைனா,போன்றவற்றை நேரில் சென்று ஆய்வு செய்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட கோழிகள் மற்றும் மர்மமான முறையில் இறந்து கிடந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தனர்.
ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகு பறவை காய்ச்சல் பாதிப்பா, வைரஸ் தாக்கமா என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved