Also Watch
Read this
By: Web Team

உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா, செவ்வாயன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தியாவில், மைசூருக்கு அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா ஆண்டுதோறும், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பத்தாம் நாள் திருவிழா, அக்டோபர் இரண்டாம் தேதி நள்ளிரவில், கோயில் கடற்கரையில் மஹிசாசூரசம்கார நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved