Also Watch
Read this
குமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.. ஓணம், மிலாடி நபி தொடர் விடுமுறையை ஒட்டி வருகை
குவிந்த சுற்றுலா பயணிகள்
Updated: Sep 17, 2024 09:39 AM
ஓணம் பண்டிகை, மிலாடி நபி என தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் கேரளாவிலிருந்தும் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், திரிவேணி சங்கமம், சன்ரைஸ் பாயிண்டில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தும், படித்துறை கடலில் குளித்து, அலைகளோடு விளையாடியும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேக மூட்டம் இல்லாத நிலையில், கடலில் சூரிய உதயம் தெளிவாக தெரிந்ததால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படமெடுத்துக் கொண்டனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies