Also Watch
Read this
By: Web Team

Govt school uniform issue :
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டார கல்வி அலுவலகத்தில் செப்டிக் டேங்க் அருகே வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடையை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 67 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்துதான் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
சீருடை வைத்திருந்த அறை சேதமடைந்த நிலையில் இருந்ததால், சீருடைகளை வெட்ட வெளியில் வைத்து பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டது. சீருடை வைக்க விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved