Also Watch
Read this
By: Manigandan Raja

காய்கறிகள் விலை உயர வாய்ப்பு :
இன்று பெட்ரோல் விலை 3.10 ரூபாயும் டீசல் 3.08 ரூபாயும் லிட்டருக்கு உயர்ந்தது குறிப்பாக இதனால் வாகன ஓட்டிகள் வியாபாரிகள் என பலரும் வேதனையடைந்துள்ளார்கள்..
இந்த நிலையில் தான் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது ஏற்கனவே கோடை காலம் என்பதால் வரத்து குறைவாக இருக்கிறது அதன் காரணமாக ஏற்கனவே விளையேற்றம் என்பது கூடுதலாக இருக்கிறது..
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை மூன்று ரூபாய் உயர்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் காய்கறிகளின் விலை ஒரு கிலோ 5 ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக பீன்ஸ் உருளைக்கிழங்கு வெங்காயம், தக்காளி உள்ளிட்டவையின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து இந்த காய்கறிகள் எல்லாம் கொள்முதல் செய்யப்படுவதால் வாகன வாடகை காரணமாகவும் அதே போல இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் உயர்வு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved