Also Watch
Read this
By: Manigandan Raja

பிறந்தநாள் கேக்கில் பல்லி
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ((Palghar)) மாவட்டத்தில், பல்லி கிடந்த கேக்கை சாப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட 11 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நளசோபாரா நகரின் ((Nalasopara)) தகிபாடா ((Takipada)) பகுதியில் 25 வயது பெண் ஒருவரின் பிறந்தநாளுக்காக வாங்கப்பட்ட கேக்கில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. இந்த கேக்கைச் சாப்பிட்ட 7 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கோவில் கருவறைக்குள் சிறுமியுடன் அத்துமீறல்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கோவில் கருவறைக்குள் சிறுமியுடன் அத்துமீறிய 65 வயது பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராமச்சந்திராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக சாயண்ணா என்பவர் இருந்து வரும் நிலையில், கருவறை மூடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து திறந்து பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம்
ஆந்திராவின் போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் விமான சேவை தொடங்கவுள்ளதாக பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பொது விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில், போகபுரத்தில் புதிய விமான சேவை துவங்குகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved