Also Watch
Read this
By: Manigandan Raja

எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் சர்சார்ஜ் :
வளைகுடா போர் காரணமாக விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி உள்ளூர் மற்றும் பன்னாட்டு விமான சேவைக்கு நாளை முதல் விமான டிக்கெட் கட்டணத்துடன் 199 ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான மார்க்கம் மற்றும் விமானம் பறக்கும் நேரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த கூடுதல் கட்டணம் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. எரிபொருள் விலை கட்டுக்குள் வரும் வரை நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வால் இந்தியாவின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் ஏற்கனவே கூடுதலாக எரிபொருள் சர்சார்ஜை வசூலிக்க தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved