Also Watch
Read this
By: Admin News Tamil

குடியேற்ற சோதனை இல்லாமல் 3 இத்தாலியர்கள் பயணம்
டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தாலியை சேர்ந்த 3 பேர் கடந்த 4-ம் தேதி லூஃப்தான்சா விமானத்தில் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றுள்ளனர்.
போதைப்பொருள் கடத்திய 8 பேர் கைது
டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3.71 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும்,1.383 கி.கி 'ஸ்மாக்' ((smack)) வகை போதைப்பொருலையும் பறிமுதல் செய்தனர். நொய்டாவை சேர்ந்த கிரண் என்பவன் மூலமாக போதைப் பொருள் விநியோகம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved