Also Watch
Read this
By: Manigandan Raja

வீடியோ வைரலான நிலையில் மீனவரை கைது செய்த வனத்துறை
பீகார் மாநிலத்தில் ஆற்றில் சிக்கிய அரிய வகை டால்பினை வீட்டிற்கு எடுத்துச் சென்ற மீனவரின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஹர்சா ((Saharsa))மாவட்டத்திலுள்ள கோசி ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை டால்பின் ஒன்று சிக்கியுள்ளது. அதை அவர் மீண்டும் ஆற்றில் விடாமல், வீட்டிற்கு எடுத்துச் செல்ல, உள்ளூர் வாசி ஒருவர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தார்.
Census கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியை
அசாம் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையான ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளையும் உடன் அழைத்துக்கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சவால்களையும், அவரது கடமை உணர்வையும் நெட்டிசன்கள் பாராட்டி வரும் இந்த வீடியோ, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெண் ஊழியர்களுக்குக் களப்பணியின் போது தேவையான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved