Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் மோடி பங்கேற்று ஆரத்தி காண்பித்து சிறப்பு வழிபாடு
டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். விநாயகர் சிலைக்கு ஆரத்தி காண்பித்த அவர், உலக அமைதி வேண்டியும், நாட்டு மக்களுக்கு செழிப்பும், நல்வாழ்வும் வழங்க வேண்டும் எனவும் விநாயகரை வழிபட்டார்.
தாய் மொழியுடன் மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
தாய் மொழியுடன் சேர்த்து மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பல மொழிகள் இருந்தாலும் இந்தியா ஒரே குரலில் ஒலிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய உணர்வு நிலைத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி
ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரே ஒரு மாநகராட்சியை மட்டும் கைப்பற்றியுள்ளது. அதேபோல, 252 நகராட்சிகளில் 144-ஐ பா.ஜ.க. வென்றது. 47 நகராட்சி கவுன்சில்களில் பா.ஜ.க 21 இடங்களையும், காங்கிரஸ் 17 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved