Also Watch
Read this
By: Manigandan Raja

4 விமானங்கள் மூலம் 68.5 டன் பொருட்கள் அனுப்பி வைப்பு
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு இந்தியா 4 விமானங்கள் மூலம் 68 டன்னிற்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மேலும், மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவ தொழில்நுட்ப குழுக்கள், தடயவியல் நிபுணர்கள், தேசிய மீட்புப் படையினர், இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய மீட்புக்குழு நேபாள ராணுவத்துடன் இணைந்து தேடுதல்
நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சென்ற சுரங்கப்பாதை மீட்புக் குழுவினர், நேபாள ராணுவத்துடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சுரங்கங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறிய நவீன உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் 180 பேர் மீட்பு
பெருவெள்ளம் தாக்கிய நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாளம் அரசு அறிவித்துள்ளது. மேலும் காணாமால் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved