Also Watch
Read this
By: Web Team

உத்தர பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசிரியர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அதீத பணி அழுத்தத்தால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். சாஹிபாபாத் சட்டமன்றத் தொகுதியில் பூத் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 58 வயதான உயிரியல் ஆசிரியர் லால் மோகன் சிங் மோதி நகரில் உள்ள அவரது வீட்டில் மூளை ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார். பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நிர்வாகம் எச்சரித்து இருந்ததாகவும், வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved