Also Watch
Read this
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்கள் 6 பேரும் இன்று ஏப்ரல் 6ஆம் தேதி, தமிழில் உறுதிமொழி வாசித்து, பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்
திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். திமுகவை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டோபர் திலக் பதவியேற்றுக்கொண்டார். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அதிமுக தம்பிதுரை, பாமக அன்புமணி
அதிமுக சார்பில், தம்பிதுரை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதிமுக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்று கொண்ட தமிழக எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விஜயகாந்த் புகைப்படம்

மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் அனுமதியுடன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட எல்.கே.சுதீஷ், அவையின் முன்பாக, அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று, தனது சட்டை பாக்கெட்டில் இருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தை உயர்த்தி காட்டி, நெகிழ்ந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved