Also Watch
Read this
By: Manigandan Raja

தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் தேர்திரு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது கெலமங்கலம் அதனை சுற்றி உள்ள 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திருவிழாவில் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோ வில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.. இதில் கெலமங்கலம், ஜுபி, தொட்டே காணப் பள்ளி, செட்டிபள்ளி, குந்துமாரணப்பள்ளி,
ஜக்கேரி உட்பட 11 கிராம மக்கள் சார்பில் நடைபெற்றன.
பிறகு அம்மனுக்கு நேர்த்திக் கடனாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் வெட்டி படையல் இட்டு வழிபாடுகள் நடைபெற்றன. தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved