Also Watch
Read this
பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தி பூங்கா, கோயம்புத்தூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம், திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் ஆகியவை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாடு
33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் தொடரமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் 196 புதிய துணை மின் நிலையங்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள மின்பாதைகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு 36 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved