news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிருக்கு அநீதி இழைத்துவிட்டது திமுக - இபிஎஸ் சாடல்
tv

Also Watch

tv

Read this

மகளிருக்கு அநீதி இழைத்துவிட்டது திமுக - இபிஎஸ் சாடல்

எதற்கு கொண்டாட்டம்?

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசியல் வலிமை மற்றும் கூடுதலாக 20 எம்.பி.க்களை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது தமிழ்நாடு என்று, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

பொன்னான வாய்ப்பு
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தையும், தனக்கு நியாயமாகச் சேர வேண்டிய கூடுதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களையும் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் மோடி வழங்கிய, 50% கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை நாம் இழந்தது மட்டுமல்லாமல், ஸ்டாலின் அவர்களே, ஒரு கைப்பாவையாகச் செயல்பட்டு, இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை கண்மூடித்தனமாக எதிர்த்தீர்கள்.

இழக்க நேரிடும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் செய்த சிந்தனையற்ற எதிர்ப்பின் காரணமாக, தொகுதி மறுவரையறை இப்போது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படவுள்ளது; இதன் விளைவாக, நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழக்க நேரிடும்.

மிகப்பெரிய அநீதி
1998ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில், 'பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை' ஜெயலலிதா கொண்டுவந்தார். அக்காலகட்டத்தில், உங்களின் தற்போதைய 'INDI' கூட்டணியைச் சேர்ந்தவர்களே அந்த மசோதா நிறைவேறாமல் போவதை உறுதிசெய்தனர். இம்முறையோ, இந்த மசோதாவை எதிர்ப்பதன் மூலம் அந்த உயரிய நோக்கத்தையே நீங்கள் சிதைத்துவிட்டீர்கள்; இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் நீங்கள் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.

எதற்கு கொண்டாட்டம்?
நீங்கள் எதைத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய சேதத்தையா? அல்லது பெண்கள் அதிகாரமயமாக்கலுக்காகக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சீர்குலைத்ததையா?
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், பதிவிட்டுள்ளார்.



Related Link
துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது - மு.க.ஸ்டாலின் வீடியோ

துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது - மு.க.ஸ்டாலின் வீடியோ



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
1 hr 17 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved