உலகின் மிகப்பெரிய கோழி ஏற்றுமதி செய்யும் நாடான பிரேசிலில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேளாண் அமைச்சகம் விலங்கு சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய ஏற்றுமதி கூட்டாளிகள், பிரேசிலிய கோழி இறக்குமதிக்கு 60 நாள் தடை விதித்துள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.