Also Watch
Read this
சட்டப்பேரவை அமர்வு தொடக்கம்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி, நிறைவடைய உள்ள நிலையில் இறுதிநாள் நிகழ்வுகள் தொடங்கின.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது. 8 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர்
அவையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் இல்லை

மிசா, சர்காரியா - கொந்தளித்த திமுக
சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, ‘முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு பேசிய மாறன் அவையில் இல்லை; அவையில் இல்லாதவர் குறித்து பேசக் கூடாது என்பது விதி, கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது,’ என்றும், மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் எ.வ.வேலு பேசினார்.

மரபை மீறிய முதல்வர்
நீதி விசாரணையில் இருப்பதை சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி இல்லை, மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதலமைச்சர் விஜய், அவை மரபை மீறி பேசியுள்ளார் என்றும், திமுக கொறடா எ.வ.வேலு புகார் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved