news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தல்
tv

Also Watch

மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தல்

"அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்"

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

’கர்நாடகாவில் சுட்டுக்கொ*லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்,’ என்று, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
கர்நாடகா மாநிலத்தில், ஹனூர் அருகே அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் அந்த மாநில வனத்துறையினரால் கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் சுட்டுக் கொ*லப்பட்டுள்ளனர்.

இதை, ஏற்கெனவே, இந்த அவையின் கவனத்துக்கு எடுத்து வந்துள்ளோம். அந்த மூன்று தமிழர்களின் உடற்கூறு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மூன்று பேருமே சித்திரவதை செய்யப்பட்டு, மிக அருகில் நிற்க வைக்கப்பட்டு, சுட்டுக் கொ*லப்பட்டு உள்ளார்கள் என்று அந்த உடற்கூறு ஆய்வறிக்கை மூலமாக தெரிய வந்து உள்ளது.

என்ன நடவடிக்கை?
மூன்று பேருக்கும் உடல் முழுக்க படுகாயம் இருந்துள்ளது. விலா எலும்பு முறிக்கப்பட்டு உள்ளது என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தெளிவாகச் சொல்கிறது. எனவே, இது முழுக்க முழுக்க ஒரு படுகொ*. இந்தப் படுகொ*க்கு எதிராக இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். குறைந்தபட்சம் அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறதா? கடந்த வாரம், கர்நாடகா முதல்வர் தென் மாநில முதல்வர் மாநாட்டுக்காக இங்கு வந்தார். அப்போது நேரிலாவது தமிழக அரசு, தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறதா?

உங்கள் கவனத்திற்கு...
கர்நாடக மாநில காவல்துறைக்குப் பதிலாக, ஒரு மேல்மட்ட நீதி விசாரணை செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று, இந்த அவையில் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளேன். இதுசம்பந்தமாக இந்த மாநில முதல்வரால் ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா? இந்தப் பிரச்சினை நடந்தவுடன் முதல்வரோ, அமைச்சரவையில் இருப்பவர்களோ, கர்நாடகா சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியையும், சட்ட உதவியையும் அரசு செய்ய வேண்டும் என்று உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Link
சேகர்பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் மட்டுமே என உதயநிதி பேச்சு

சேகர்பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் மட்டுமே என உதயநிதி பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேகர்பாபு வசம் சிக்கிய ரகசியங்கள்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved