news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அறியாமையில் பேசுகிறார் விஜய் - இபிஎஸ் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

அறியாமையில் பேசுகிறார் விஜய் - இபிஎஸ் விமர்சனம்

அதிமுக ஆட்சி உறுதி - இபிஎஸ் திட்டவட்டம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அறியாமையின் வெளிப்பாடாக திமுக வெர்சஸ் த.வெ.க. என விஜய் பேசி வருவதாக விமர்சித்தார். கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக கூறிய ஆ.ராசாவை விட்டு விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் மோதிக் கொண்டிருக்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்தார்.

எடப்பாடியில் இபிஎஸ்
எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகுதி​யில், அதிமுக சார்​பில் அக்​கட்​சி​யின் பொதுச்​ செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி, 8ஆவது முறை​யாக போட்​டி​யிடு​கிறார். தேர்​தல் நடத்​தும் அலு​வல​ரான நடராஜனிடம் வேட்​புமனுவை தாக்​கல் செய்​த பின்னர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

அதி​முக​வுக்கு வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்​ளது. தேமு​தி​க​வுக்கு அரை சதவீதம் ​தான் வாக்கு வங்கி உள்​ளது. தேமு​தி​க​வுக்கு 2026 மாநிலங்​களவை உறுப்​பினர் சீட்டு வழங்​கு​வ​தாக கூறினேன். அதற்​குள் அவர்​கள் மனநிலை, அணி​ மாறி விட்​டார்​கள். உதயநிதி ஸ்டா​லின் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி வரு​கிறார். அதில் மும்​மொழிப் பாட​மும் நடத்​தப்​படு​கிறது. தங்​களுக்கு தேவை என்​றால் மட்​டும் எந்த மொழியை வேண்​டு​மா​னாலும் அனு​ம​திப்​பார்​கள்.

பிரதமர் மோடி வருகிறார்
தமிழகத்​தில் நடை​பெறு​வது சட்​டப்​பேரவை தேர்​தல். மக்​களவை தேர்​தல் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு பேச வேண்​டும். ஒன்​று, இரண்டு திட்​டங்​கள் விடு​பட்​டிருந்​தால் மீண்​டும் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் வெற்றி பெற்று அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் விடு​பட்​டது அனைத்​தும் நிறைவேற்றித் தரப்​படும். 15ஆம் தேதி கன்​னி​யாகுமரி​யில் பிரதமர் பங்​கேற்​கும் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நானும் பங்கு பெறுகிறேன்.

பெரும்பான்மை வெற்றி
ஆ.ராசா பேசியதாக வெளி​யான ஆடியோ இந்​திய அளவில் வைரலானது. கருணாநிதி உடல்​நிலை சரி​யில்​லாமல் இருந்​த​போது வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​ட​தாக​வும், பட்​டியல் இனமக்​கள் பாகு​பாடு பார்க்​கப்​பட்​ட​தாக​வும், ஆடியோ​வில் பேசப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்து தான் கருத்துக் கூறினேன். இந்த விவகாரத்தில் ராசா மீது நடவடிக்கை எடுப்​பதை விட்​டு​விட்டு, என் மீது பாய்​வ​தில் என்ன இருக்​கிறது? அதி​முக தலை​மையி​லான கூட்​டணி, அதிக இடங்​களில் வெற்றி பெறும். அதி​முக அதிக இடங்​களில் பெரும்​பான்​மை​யாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும்.
இவ்​வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Link
விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்கள் போட்டியா?

விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்கள் போட்டியா?

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபையில் குவிந்த பொது மக்கள்

7
45 mins agoshare
உசிலம்பட்டியில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved