Also Watch
Read this
By: Manigandan Raja

காமராஜரை கேலி கிண்டல் செய்வது ஏற்புடையதல்ல
சட்டசபையில் காமராஜரை பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசும்போது, திமுக உறுப்பினர்கள் கேலி, கிண்டல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரவை நிகழ்வில் பங்கேற்ற பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 1967ஆம் ஆண்டுக்கு முன்னால் பெருந்தலைவர் காமராஜரை கார்ட்டூன் போட்டார்கள், கேலி சித்திரங்கள் வரைந்தார்கள், அவர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாக திமுகவினர் விமர்சித்தார்கள் என்றும், அதை நிலையை இப்போதும் பார்ப்பதாகவும் கூறினார்.
த.வெ.க. அரசின் பட்ஜெட் ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கிறது
தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கை, ஏமாற்றுதலின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட் என்று திமுக எம்எல்ஏவான முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஒ.பன்னீர்செல்வம், செய்வதை மட்டும்தான் சொல்வோம் என தேர்தலில் அளித்தெளித்த வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக அரசு மறந்து விட்டதாகவும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பெயர் மாற்ற பட்டியல் போல உள்ளதாக குற்றம்சாட்டினார்.

பட்ஜெட்டில் திருப்புகிற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே உள்ளதாகவும், புதிய அரசின் திட்டங்களை தேடிக் கொண்டே இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved