Also Watch
Read this
By: Manigandan Raja

பலப்பரீட்சை :
டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் என்பது தொடர்பாக தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி போட்டியில், மார்க்ரம், சான்ட்னர் தலைமையில் இரு அணிகளும் மோதுகின்றன.
தென்னாப்ரிக்க அணியில், குவின்டன் டி காக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.
அதேபோல, நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கொன்சி ஆகியோர் உள்ளனர். எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved