Also Watch
Read this
By: Manigandan Raja

கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை :
6 ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே மற்றும் ஸ்பான்சர்ஷிப் செய்துள்ள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கெய்க்வாட் எட்ட முடியாத இலக்கு எதுவுமில்லை என தெரிவித்தார்.