Also Watch
Read this
By: Manigandan Raja

மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரம்
ரஷ்யாவின் கபார்டினோ-பால்காரியா பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் 11 பேர் உயிரிழந்தனர். மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் 9 பேர் பலி
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனானின் கபர் ரிமன் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved