Also Watch
Read this
By: Manigandan Raja

விழாவுக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தன
மெக்சிகோவில் மத விழாவின்போது நிகழ்ந்த பயங்கர பட்டாசு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 2 பாதிரியார்கள் உட்பட 64 பேர் காயமடைந்தனர். மெக்சிகோவின் தெமஸ்கால்சிங்கோ நகரில் உள்ள நுவெஸ்ட்ரா செனோரா டி லா லுாஸ் சர்ச்சில் புனிதருக்கான பாரம்பரிய மத விழா நடைபெற்றது.
விழாவில், நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த நிலையில், விழாவுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொருட்கள் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மீதான வன்முறை
அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மீதான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐநா சபையின் மனித உரிமை நிபுணர்கள் குழு பாகிஸ்தானிடம் வலியுறுத்தி உள்ளது.

அந்த சமூகத்தினர், தங்களது மத அடையாளத்தின் காரணமாக தொடர்ந்து துன்புறுத்தல்கள், வன்முறைகள், சமூகப் புறக்கணிப்பு மற்றும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு தனது சர்வதேச மனித உரிமை பொறுப்புகளை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved