Also Watch
Read this
By: Manigandan Raja

8 பேரை கொன்றுவிட்டு தற்கொலை செய்த மாணவன்
தாய்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் மூன்று ஆசிரியர்களையும், 3 மாணவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோதன்புரி மாகாணத்தில் உள்ள பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென 9ஆம் வகுப்பு மாணவன் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து சுட்டான். இந்த கொடூரத் தாக்குதலுக்கு முன்னதாக அம்மாணவன், தனது தாத்தா பாட்டியை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இந்திய சுதந்திர தின விழாவுக்கு தயாராகும் பாஸ்டன் நகரம்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5வது சர்வதேச இந்திய சுதந்திர தின அணி வகுப்பு வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

சுதந்திர திருவிழா மற்றும் அமெரிக்க - இந்திய நட்பு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அணிவகுப்பு இருக்கும் என இந்திய - அமெரிக்கர்களின் அறக்கட்டளையான நியூ இந்தியா தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved