Also Watch
Read this
By: Manigandan Raja

அபாயங்களைக் கண்டறிந்து, தடுக்க ஆய்வகம்
மருத்துவத் துறையில் AI-யின் பங்களிப்பை ஆராய, ANTHROPIC நிறுவனம்,சான் பிரான்சிஸ்கோவில் உயிரியல் ஆய்வகத்தைத் தொடங்கியது. புதிய மருந்து கண்டுபிடிப்புகளில் Al-ஐ எவ்வாறு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தலாம் என்பதையும், Al மூலம் ஏற்படக்கூடிய உயிரியல் அபாயங்களைக் கண்டறிந்து, தடுக்கும் விவகாரங்களிலும் இந்த ஆய்வகம் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியில் தொழுகையின்போது குண்டு வெடிப்பு தாக்குதல்
பாகிஸ்தானின் கோஹாட் நகரில் போலீஸ் லைன்ஸ் அருகே உள்ள மசூதியில்தொழுகையின்போது ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 15 பேர் போலீசார் என தகவல் வெளியாகியுள்ளது.

வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்தது. இத்திஹாதுல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved