Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் வலுவான ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய புதின், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தொடர்ந்து மேலும் வலுப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் வாழ்த்து
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஈரான் இடையேயான நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சியூட்டாவில் குடியேற மொராக்கோ நாட்டினர் திட்டம்?
ஸ்பெயின் எல்லைப் பகுதியான சியூட்டாவில் மீண்டும் மொரோக்கோ நாட்டினர் குடியேறுவதை தடுக்க அந்நாட்டு அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சியூட்டாவின் கடல் எல்லையிலும் வேலி அமைத்து ராணுவத்தினரை குவித்து, எல்லை நெடுகிலும் இரும்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved