Also Watch
Read this
By: Manigandan Raja

(Courtesy : Reuters)
செர்பியா நாட்டில் நிலவும் வறட்சியில் நீரோட்டம் இன்றி மெலிந்து போனது டானூப் ஆறு
செர்பியா நாட்டில் நிலவும் கடும் வறட்சியில் புகழ்பெற்ற டானூப் ஆறு நீரோட்டம் இன்றி காணப்படுகிறது. டானூப் நதி நீரின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவில் 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போரின் போது மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்கள் மீண்டும் தென்படுவதையும் காண முடிகிறது.
காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் கவனமாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய இங்கிலாந்தில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பிரதமர் ஆண்டிபுர்ன்ஹாம் (( Andy Burnham)) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(Courtesy : Reuters)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved