கச்சா எண்ணெய் விலை 8% உயர்வு : மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. உலகளவில் 20 முதல் 30 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ((Hormuz))ஜலசந்தி வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் நிலையில், அமெரிக்கா,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக மிரட்டி வருகிறது. அப்படி மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கும். இதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்கும். Related Link பெட்ரோல் நிரப்ப காத்திருந்த பைக் பற்றிய திடீர் தீ