Also Watch
Read this
By: Manigandan Raja

மசூதி குண்டு வெடிப்பு :
பாகிஸ்தானில் 31 பேர் பலியான மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.
150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் முழுவதும் அவசரநிலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ISIS அமைப்பு தொழுகை கூடத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved