Also Watch
Read this
By: Manigandan Raja

காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன் :
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 66-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு முருகப்பெருமான் சந்தன அலங்காரம் செய்யப்பட்டு மாக தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானிற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, வேல் காவடி, பால்குடம் மற்றும் அழகுபட்டி பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved