Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தகவல்
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்தார். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கமேனி படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், ஈரான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் கமேனியை சந்தித்து சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கியப் பொறுப்புகளுக்கு ஆறு மூத்த தளபதிகள்
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, ஆயுதப் படைப் பிரிவு, இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவு மற்றும் பாசிஜ் எதிர்ப்புப் படை ((Basij Resistance Force)) ஆகியவற்றில் உள்ள முக்கியப் பொறுப்புகளுக்கு ஆறு மூத்த தளபதிகளை நியமித்துள்ளார்.

அலி அப்தொல்லாஹி((Ali Abdollahi)) ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், கியூமர்ஸ் ஹேதாரி((Kioumars Heydari )) தலைமை அதிகாரியின் துணைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹோர்மூஸ் நீரிணை
தற்போதுள்ள சூழலில் அமெரிக்க கடற்படையால் மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். நீரிணை 100 சதவிகிதம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தாங்கள் நினைக்கும் கப்பல்களை மட்டுமே நீரிணை வழியாக அனுப்புவதாகவும் டிரம்ப் கூறினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved