Also Watch
Read this
By: Manigandan Raja

Al பாதுகாப்பு குறித்து வரும் 23ம் தேதி உரையாற்றுகிறார்
Al பாதுகாப்பு குறித்து வரும் 23ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் OpenAI CEO சாம் ஆல்ட்மேன் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவதும், அதன் அதிகாரம் ஒருசிலரிடம் முடங்குவதும் கொடூர சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என சாம் ஆல்ட்மேன் எச்சரித்திருந்த நிலையில், இந்த ஐ.நா. கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் பாதுகாப்பு சோதனையில் கட்டுப்பாடு மீறல்
சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, 3 நிறுவனங்களின் சிஸ்டத்தை GEMINI AI ஹேக் செய்ததாக GOOGLE நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு போலி நிறுவனத்தின் தகவல்களைப் பெற GEMINI AI-க்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் தவறுதலாக 3 நிஜ நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளைக் கணித்து, அவைகளின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஊடுருவியுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்க வாய்ப்பில்லை
AI தொழில்நுட்பம் மனிதகுலத்தை அழிக்க வாய்ப்பே இல்லை என பிரபல அமெரிக்க டெக் நிறுவனமான NVIDIA CEO ஜென்சன் ஹுவாங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வாதம் முற்றிலும் அர்த்தமற்றது என்றும், இதுபோன்ற அச்சங்கள் வெறும் கவன ஈர்ப்புக்காக சிலர் பரப்பலாம் என அவர் கூறினார்.

மேலு AI-ஐ முழுமையாகக் கட்டுப்படுத்தி, திறம்பட நிர்வகிக்க முடியும் எனவும் ஜென்சன் ஹுவாங் கருத்து தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved