Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணிப்பு
ஈரானுடனான மோதல் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என்றும், பின்னர் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். அநேகமாக அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகே இது நிகழ வாய்ப்புள்ளதாக கூறிய டிரம்ப், மக்கள் இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றார்.
உலகையே உலுக்கிய நேபாள கோர சம்பவம்
நேபாள கோர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1386-ஐ தொட்டுள்ளது. நுவாகோட், ரசுவா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி மாயமான 4ஆயிரத்துக்கு மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் 188 பேருடன் சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டதில், 44 பேர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், ரயிலை கவிழ்க்க சதி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் விபத்தில் சிக்கிய ஒரு இளம் பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved