திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி, தமிழ் கலாச்சாரப்படி மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொண்டனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டவர்கள் ஏழரைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் வேட்டி சேலை அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு திருமணத்தை தமிழ் முறைப்படி நடத்தி வைத்தனர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment