தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமி வன்கொடுமை

மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமி வன்கொடுமை

மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு
போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மனநலம் பாதித்த சிறுமையை
வன்கொடுமை செய்ததற்காக மேலும் 10 ஆண்டுகள் மற்றும் 20,000 ரூபாய் அபராதம்
விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட ராயப்பன்பட்டி பகுதியைச்
சேர்ந்த சதீஸ்குமார் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 16
வயது சிறுமியை ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில்
ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்
இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்ற
நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில், சதீஸ்குமார் குற்றவாளி என
தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு போக்சோ சட்ட பிரிவு 6 இன் கீழ் 10 ஆண்டுகள்
சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மனவளர்ச்சி குன்றிய
சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 366ன் கீழ்
மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்
விதித்ததோடு, அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை
விதித்ததோடு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க உத்தரவிட்டு
போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து குற்றவாளி சதீஷ்குமாரை சிறையில் அடைக்க காவல்துறையினர்
பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

00 Comments

Leave a comment