தமிழ்நாடு

தேர்தல் கெடுபிடியால் களையிழந்து காணப்பட்ட ஆட்டுசந்தை

தேர்தல் கெடுபிடியால் களையிழந்து காணப்பட்ட ஆட்டுசந்தை

தேர்தல் கெடுபிடியால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தைக்கு, வியாபாரிகள் அதிகளவில் வருகை தராததால் சந்தை களையிழந்து காணப்பட்டது. ரம்ஜான் பண்டிகையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த எராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். தேர்தல் பறக்கும் படையினர் கெடுபிடியால் வெளியூர் வியாபாரிகள், பணத்தை எடுத்து வரமுடியாத சூழல் நிலவுவதால், சந்தைக்கு வியாபாரிகள் அதிகளவில் வருகை தரவில்லை. 4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் சந்தையில் ஒரு கோடி அளவு மட்டும் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகளும் கவலை அடைந்தனர்.

 

00 Comments

Leave a comment