இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும், சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புவதாக கூறினார். இருப்பினும், இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் இந்திய அரசு கையாள வேண்டும் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
உலகம்
00 Comments
Leave a comment