Also Watch
Read this
By: Fyrose Banu

கோத்தகிரி அருகே உள்ள குயின் சோலை தேயிலை தோட்டத்தில் உலா வந்த ஒற்றை பெரிய கரடி கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் சாலைகளிலும் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
குயின் சோலை சாலையில் உலா வரும் ஒற்றை கரடி
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குயின் சோலை செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் ஒற்றை பெரிய கரடி உலா வந்தது. அதை கண்ட அவ்வழியாக தேயிலைத் தோட்ட பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கரடி உலா வரும் வீடியோ வலைதளங்களில் வைரல்
மேலும் தேயிலை தோட்ட பணியாளர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வனத்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் பகல் மற்றும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved