Also Watch
Read this
By: Manigandan Raja

20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான வறட்சி, வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியை தாக்கிய டால்பின் புயல்
‘டால்பின்’ புயல் கரையை கடந்தபோது, சீனாவின் கிழக்குப் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved