Also Watch
Read this
By: Fyrose Banu

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உடபட்ட குறிச்சி ஊராட்சியில்,செல்லி கவுண்டனூர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் வழங்கப்படுவதில்லை என தெரிகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறிச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டால் மட்டுமே இங்கு இருந்து கலைந்து செல்வம் என உறுதியாக கூறி காத்திருத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் காலி குடங்களுடன் அமர்ந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved