Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சாய் தர்ம தேஜ் சுவாமி தரிசனம்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சாய் தர்ம தேஜ் இன்று சுவாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு, தரிசனத்திற்குப் பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்கினர். மேலும், தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து, கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது வரவிருக்கும் திரைப்படமான 'சம்பராளு ஏடிகட்டு' படத்தின் பணிகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில், சுவாமியின் ஆசீர்வாதத்துடன் படம் வெற்றி பெற வேண்டும் என சுவாமியை வேண்டிக் கொண்டேன்" என்று தெரிவித்தார். அதன்பிறகு அங்கு கூடிய அவரின் ரசிகர்கள் நடிகர் சாய் தர்ம தேஜுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved