Also Watch
Read this
By: Manigandan Raja

கதையின் தரத்திற்கே முக்கியத்துவம்-அதிதி ஷங்கர்
தனக்கு அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நடிகை அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார். நல்ல கதைகள் மற்றும் தன்னை கவரும் கதாபாத்திரங்கள் கிடைக்கும் படங்களில் மட்டும் நடிக்க விரும்புவதாகவும், படங்களின் எண்ணிக்கையை விட கதையின் தரத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடனப் பாடல்களுக்காக மட்டுமே தன்னை அணுகும் இயக்குநர்கள்
நடிகை தமன்னா, தன்னை பெரும்பாலான இயக்குநர்கள் நடனப் பாடல்களுக்காக மட்டுமே அணுகுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். சவால் நிறைந்த, நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாக கூறிய அவர், கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "தர்மதுரை" திரைப்படம்
ஒரு திரைப்படம் மக்கள் மனதில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்கிறது என்பதே, அந்த படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "தர்மதுரை" திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், படத்திற்கு உயிர் கொடுத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved