Also Watch
Read this
By: Manigandan Raja

பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ரோபோ ஒலிம்பிக் போட்டிகள்
சீனாவின் பெய்ஜிங்கில் ரோபோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக ஓட்டப்பந்தய பயிற்சியில் இருந்த மனித உருவ ரோபோ ஒன்று, ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் பலமாக மோதி பின்னோக்கியே சென்று இரண்டாக உடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.
நாளை தொடங்க உள்ள மனித உருவ ரோபோ இரண்டாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் 666 அணிகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்கின்றன.
ஜப்பானில் விரைவு ரயில் மோதியதில் 4 பேர் பலி
ஜப்பானின் விரைவு ரயில் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாயினர். Shin-Kanuma என்ற ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சென்ற விரைவு ரயில் மோதியது.

ரயில் வருவதை கண்காணிப்பாளர்கள் எச்சரித்து தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேறச் செய்யாததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இனப்படுகொலை புகார்- இஸ்ரேல் பிரதமருக்கு பிடி வாரண்ட்
இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. காஸா மீது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வந்த போருக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved